(குறிப்பு-இது சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் சொல்லப்பட்ட சாதி,மதம்,இனம் கடந்த காதல் பற்றி தீபிகாவின் பேட்டி...)
சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் ஒரு வட இந்திய பையன் (ஷாருக்கான்) தென்னிந்திய பெண் (தீபிகா படுகோன்) மீது காதல் கொள்வதுபோல் நடித்திருப்பதைப் பற்றி..........
"காதல் திருமணங்களுக்கான சூழ்நிலைகள் இந்தியாவில் மாறிவிட்டது"
என்று தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
இன்று இந்தியாவில் சாதி கலப்பு காதல் திருமணங்களுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு காட்டுகின்றார்களே என்று நிருபர்கள் கேட்டதற்கு...
"இன்றையப் பெண்கள் அவர்கள் விரும்பியதை அடைவதில் உறுதியாக இருக்கிறார்கள்.வாழ்க்கைப் பாணி மாறிவிட்டது.கலாச்சாரம் மாறிவிட்டது.இன்று பெண்கள் சமுதாயத்தில் முக்கிய குரல் கொடுப்பவர்களாக
அவர்களது நிலையும் உயர்வடைந்து உள்ளது"
என்று பதில் அளித்த நடிகை தீபிகா படுகோன் தொடர்ந்து....
"பெண்கள் ஓடிப் போக தேவையில்லை.மேலும் பெற்றோர்கள் தங்கள் மகள் சந்தோசம்.... சாதி,மதம் பற்றியது அல்ல என்பதையும் முக்கியமாக அவர்கள் தங்கள் மகள் மகிழ்ச்சியாக இருக்க யாருடன் வாழ விரும்புகிறாள் என்பதை அனுமதிப்பதிலும் உள்ளது பெற்றோரின் காதல் எதிர்ப்பு இன்று இந்தியாவில் இருக்கலாம் ஆனால் இன்றைய காலகட்டத்தில் அவை எண்ணிக்கையில் குறைவு" என்று தெளிவாக குறிப்பிட்டார்.
அது சரி..தீபிகா அம்மணி... நீங்க சொல்லுவதெல்லாம் 99 % விழுக்காடு சரிதான் அம்மணி ஆனால் இங்க தமிழ் நாட்டுல நிலைமை அப்படியில்லையே..
இங்கே காதலில் சாதிய விட அரசியல் பூசாண்டிகளின் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்..
இங்கே மரம்வெட்டி மன்னாருக இன்னும் காட்டுப்பூசியாக இருக்கிராயிங்க...
இங்கே பட்டணத்து காதல் பட்டாம்பூச்சியாக பறக்கிறது...கிராமத்துக் காதல் சாதீய அரசியலில் கருகிப் போகிறது
ஆனாலும் அம்மணி உங்களைப் பாராட்ட வேண்டும்..சென்னை எக்ஸ்பிரஸ் சினிமாவில் அவிங்களுக்கு உங்க லவ்வர் ஷாரு மூலம் நல்ல பாடம் சொன்னீங்க..வாழ்த்துகிறோம்
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |