google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: எங்கிருந்தோ வந்தார்-கேமரூன்

Wednesday, November 20, 2013

எங்கிருந்தோ வந்தார்-கேமரூன்


எங்கிருந்தோ வந்தார் 
இலங்கைத் தமிழர் சாதி
நான் என்றார் 



Made with .freeonlinephotoeditor.com

இங்கிவரை யாம் பெறவே 
என்ன தவம் செய்துவிட்டோம்
டேவிட் கேமரூன்-
எங்கிருந்தோ வந்தார் 

சொன்னபடி செய்வார் 
இலங்கைத் தமிழர்களை காத்திடுவார் 
கண்ணை இமையிரண்டும் காப்பது போல் 
இலங்கைத் தமிழர் இன்பமுறக் காத்திடுவார் 
   
இன்னல் பட்டஇலங்கைத் தமிழர்
துயர் நீங்கிட குரல் கொடுத்தார் 

நண்பனாய் மந்திரியாய் நல்லாசிரியனுமாய்
யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத
அப்யுத்தானமதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யகம் 


http://news.bbcimg.co.uk/media/images/71140000/jpg/_71140799_71136193.jpg

 

பண்பிலே தெய்வமாய்
பார்வையிலே சேவகனாய் - கேமரூன் 
எங்கிருந்தோ வந்தார் 
இலங்கைத் தமிழர் சாதி
நான் என்றார்


இங்கிருந்து போன
இங்கீதம் இல்லாதோர் 
சிங்களர் தோட்டத்து 
தலைவாழை இலை போட்டு 
விருந்துண்டு வந்துவிட்டார் 

http://andaluciainformacion.es/cms/media/articulos/articulos-207398.jpg
 
இங்கிலாந்திலிருந்து வந்த
கேமரூன் என்ற கோமகனோ
இலங்கைத் தமிழர்கள் 
இதயங்களில் நுழைந்துவிட்டார்

இங்கிருக்கும் தமிழர் சாதி
தலைவர்களின் முகங்களிலே
கரிதான் பூசிப் போய் விட்டார் 


                         thanks-YouTube by Channel 4 News

எங்கிருந்தோ வந்தார்-கேமரூன் 
இலங்கைத் தமிழர் சாதி
நான் என்றார் 





  
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1