கோயில் உண்டியலில் பணம் செலுத்துவதை விட வருமான வரி கட்டினால் நாட்டு மக்களுக்கு உடனடியாக பலன் கிடைக்கும் என்று கமல்ஹாசன் பேசியிருப்பது அவரது அறியாமையைக் காட்டுகின்றதா...? அல்லது அவரது நாட்டு நலனை பிரதிபலிக்கின்றதா....?
இன்று உலக அளவில் பெரும் பணக்காரர்களாக இருப்பது கண்ணுக்குத் தெரியாத கடவுள்களே......இங்கே எந்த மதம் என்ற வேறுபாடு கிடையாது.
நீயா? நானா? என்று ஒவ்வொரு மதத்திலும் உள்ள கடவுள்கள் போட்டிப் போட்டு....
பக்தி என்ற பெயரில் பாமர மக்களும் பணம் கொழுத்த செல்வந்தர்களும் காணிக்கை என்று கடவுளுக்கு பணத்தைக் கொட்டுகின்றார்கள் சில பல தொழில் அதிபர்கள் கடவுளை அவர்கள் தொழில் (நல்லதோ? கெட்டதோ?) பங்குதாரர்களாக நினைத்துக்கொண்டு உண்டியலை நிரப்புகின்றார்கள்
சிலர் தங்களுக்கு உழைப்பவர்களுக்கு எதுவும் கொடுக்காமல் கோயிலுக்கு தங்கக் கதவுகள் மாட்டுவார்கள்..........இன்னும் சிலர் பக்தரின் கஷ்டங்களை போக்குகின்றேன் என்று சொல்லி கடவுள் தூதுவர்களாக நன்கொடை பெறுவார்கள்....இப்படி மதவேறுபாடின்றி உலகம் சுழலுகின்றது.... இதை ஒழிப்பது என்றும் சாத்தியமில்லை
எல்லா கடவுள்களையும் எல்லா மதங்களையும் எல்லா மதவாதிகளையும் அரசுடைமை ஆக்கிவிட்டால் எல்லா உண்டியல்களும் அரசு கஜானாவுக்கு வந்துவிடும்...அதற்கு கமல்ஹாசன் போன்ற பிரபலங்கள் முயற்சி செய்வார்களா....?
அடக்கடவுளே.....இது இப்படியிருக்க நம்ம உலகநாயகரோ உண்டியலில் பணம் போடாதீர்கள்........வருமான வரிகட்டுங்கள் என்று அதிரடியாக சொன்னது விரைவில் வெளி வரவிருக்கும் தனது விஸ்வரூபம்-2 படத்தை முன்னிட்டு மதவாதிகள் மத்தியில் மீண்டும் ஒரு பிரலயத்தை உருவாக்கும் விளம்பர உத்தியா...?
உங்கள் பார்வையில்..............
உண்டியலில் பணம் போடாதீர்கள் என்ற கமல்ஹாசனின் பேச்சு அவரது அறியாமையைக் காட்டுகின்றதா....? அல்லது அவரது நாட்டு நலனை காட்டுகின்றதா...? அல்லது அவரது சுயநலத்தை வெளிப்படுத்துகின்றதா...?
வெ.புகழ்மணி
உண்டியலில் காணிக்கை செலுத்துவதை விட வருமான வரி கட்டினால் மக்களுக்கு பலன் கிடைக்கும்-கமல்#உண்டியல் ஏந்தும் கட்சிக்கு கோவம் வரப்போகிறது!
தெனாலி™
@i_thenali
உண்டியலில் காணிக்கை செலுத்துவதை விட வருமான வரிகட்டுங்கள்- கமல் #பணத்தை பதுக்காமல் வரி கட்டுங்கன்னும் சொல்லலாம் Sir..
காட்டு ராஜா
@karjanai
உண்டியலில் காணிக்கை செலுத்துவதை விட வருமான வரிகட்டுங்கள்-கமல்
#நாத்திகம் பிளஸ் நாட்டுநலன்.. சூப்பர்,.. கமல் வாய்ஸ்ல ஓரே கல்லுல ரெண்டு மாங்கா
புருடா_
@puruda_
உண்டியல்ல
யாரும் பணம் போடாதீர்கள்னு சொல்றாரு கமல் இதை நான் வழிமொழிகிறேன் ஆனா
யாரும் சினிமாவிற்க்கு போகாதிங்கனு சொல்ல எனக்கு உரிமை இருக்குதா?
RajaR
@Rajarath
கோயில் உண்டியலில் பணம் போடறத விட வருமான வரு கட்டினா நாட்டுக்கு நல்லது-கமல் # ஸ்ருதிகிட்ட சொல்லனும்னா நேரடியா சொல்லவேண்டியதுதான! சார்!
உண்டியலில் பணம் போடாதீர்கள்-கமல்ஹாசன்
விரைவில் வரும் விஸ்வரூபம்-2 ஓடும் தியேட்டரில் போடுங்கள்
http://t.co/9oc6lMqDYw
— பரிதி.முத்துராசன் (@PARITHITAMIL) February 26, 2014
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |