google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: எல்லாக் கட்சித் தலைவர்களையும் கைது செய்யுங்கள்...?

Tuesday, March 11, 2014

எல்லாக் கட்சித் தலைவர்களையும் கைது செய்யுங்கள்...?


மோடி,ராகுல்,சோனியா,அரவிந்த் கெஜ்ரிவால்,கருணாநிதி,ஜெயலலிதா, விஜயகாந்த்,வைகோ... என்று ஒருவர்விடாமல் எல்லாக் கட்சித் தலைவர்களையும் கைது செய்து வீட்டு சிறையில் வைக்கவேண்டும் என்று...


நம்ம  நண்பர் கருத்து கருந்தேள் சொன்னபோது அவருக்கு பைத்தியம் பிடித்துவிட்டதோ என்று நினைத்தேன் ஆனால்..யோசனை செய்தால் இது சரிதான் எல்லா கட்சித் தலைவர்களையும் கைது செய்தால்...அது அவர்களுக்கும் நாட்டுக்கும் நல்லதுதான் 

தேர்தல் காலங்களில் வோட்டு சேகரிக்க இந்தத் தலைவர்கள் பிரச்சாரம் என்ற போர்வையில் மக்களுடன் நெருங்கிப் போவதும் அவர்களை பார்க்க முண்டியடித்து கூட்ட நெரிசலில் மக்கள் சாவதும் சில நேரங்களில் தலைவர்கள் சாவதும் இது தேவையா...?
அப்படி  அவர்கள் மக்களோடு நெருங்கும் போது பாதுகாப்பு குளறுபடியில் ஏதேனும் தவறு...மரணம் நடந்துவிட்டால் அந்தக் கட்சிக்கு அனுதாப அலை வீசுவதும் அதனால் அந்தக் கட்சி அதிக பெரும்பான்மையில் வெற்றிப் பெற்று ஆட்சியை பிடிப்பதும் நடக்காதல்லவா...?

 

















தேர்தல் முடியும் வரை இந்தத் தலைவர்கள் அனைவரையும் கைது செய்து வீட்டு சிறையில் வைக்கலாம் அவர்களது தேர்தல் பிரச்சாரத்தை தொலைக்காட்சியில் வைத்துக்கொள்ளலாம் அப்படி செய்தால்...போலியாக கூட்டம் சேர்த்து பந்தா காட்ட முடியாதல்லவா...?
வெளிநாடுகளில்  இப்படித்தான் தேர்தல் நடக்குதாமே...?

எத்தனையோ கட்டுப்பாடுகள் விதிக்கும் தேர்தல் ஆணையம் இந்த நல்ல காரியத்தை செய்யுமா?....வெளிநாடுகள் போன்று தலைவர்களை வெளியே விடாமல் தேர்தலை நடத்துமா....?

(யோவ்...புண்ணாக்கு பதிவரே! முதல்ல உண்ணயும் உன் பிளாக்கையும் தடை செய்ய வேண்டும்..........தேர்தல் வந்தாலும் வந்துச்சு...இப்படி தினமும் எதையாவது கிறுக்கி எங்க உயிர எடுக்குற...ஆங்...)
  
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1