எங்கிருந்தோ வந்தார்
இலங்கைத் தமிழர் சாதி
நான் என்றார்
இங்கிவரை யாம் பெறவே
என்ன தவம் செய்துவிட்டோம்
டேவிட் கேமரூன்-
எங்கிருந்தோ வந்தார்
சொன்னபடி செய்வார்
இலங்கைத் தமிழர்களை காத்திடுவார்
கண்ணை இமையிரண்டும் காப்பது போல்
இலங்கைத் தமிழர் இன்பமுறக் காத்திடுவார்
இன்னல் பட்டஇலங்கைத் தமிழர்
துயர் நீங்கிட குரல் கொடுத்தார்
நண்பனாய் மந்திரியாய் நல்லாசிரியனுமாய்
யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத
அப்யுத்தானமதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யகம்
பண்பிலே தெய்வமாய்
பார்வையிலே சேவகனாய் - கேமரூன்
எங்கிருந்தோ வந்தார்
இலங்கைத் தமிழர் சாதி
நான் என்றார்
இங்கிருந்து போன
இங்கீதம் இல்லாதோர்
சிங்களர் தோட்டத்து
தலைவாழை இலை போட்டு
விருந்துண்டு வந்துவிட்டார்
இங்கிலாந்திலிருந்து வந்த
கேமரூன் என்ற கோமகனோ
இலங்கைத் தமிழர்கள்
இதயங்களில் நுழைந்துவிட்டார்
இங்கிருக்கும் தமிழர் சாதி
தலைவர்களின் முகங்களிலே
கரிதான் பூசிப் போய் விட்டார்
thanks-YouTube by Channel 4 News
எங்கிருந்தோ வந்தார்-கேமரூன்
இலங்கைத் தமிழர் சாதி
நான் என்றார்
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |