பெருந்தலைவர் காமராஜரும் ஊழல் செய்திருக்கிறார் என்றால் நம்பமுடியவில்லையா....?
ஒருமுறை ஒரு திரையரங்கு உரிமையாளர் ஒருவர் முதல்வர் காமராஜரிடம் உரிமம் கேட்டு வந்தார் அவரிடம் காமராஜரோ ஒரு டீல் பேசினார்
முனைஞ்சிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் உரிமையாளர் ரத்னா, பார்வதி என்று இரண்டு திரையரங்குகள் கட்டி விட்டு
அனுமதி பெற அப்போது முதல்வராக இருந்த காமராஜரிடம் சென்றார் ஆனால் அவரோ உடனே அனுமதி கொடுக்கவில்லை..
நான் திரையரங்கிற்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்றால் நீங்கள் இரண்டு பள்ளிகூடங்கள் கட்ட வேண்டும் அப்படி கட்டி வாருங்கள் அப்போது நான் அனுமதி கொடுக்கிறேன் என்றார்.
வேறுவழியில்லாமல்....
காமராஜர் சொன்ன படியே முனைஞ்சிபட்டியில் ஒரு பள்ளியையும் நாங்குநேரியில் ஒரு பள்ளியையும் கட்டி முடித்துவிட்டு காமராஜரிடம் சென்றார்.
அப்போது காமராஜர் திரையரங்குகளுக்கு அனுமதி கொடுத்தது மட்டுமல்லாமல் நேரில் வந்து இந்த இரண்டு பள்ளிகளையும் திறந்தும் வைத்தார்
அன்று காமராஜர்.திறந்த அந்த பள்ளிகளில் இன்று 2000 க்கும் மேலான மாணவர்கள் படிக்கின்றார்கள்
இன்று ஒரு கட்டடத்திற்கு இவ்வளவு தொகை லஞ்சம் வேண்டும் என வாங்கி தங்கள் பாக்கெட்டில் போடும் ஊழல் ஆட்சியாளர்கள் மத்தியில்....
பணக்காரர்களிடம் தன் அதிகாரத்தை பயன்படுத்தி நாட்டு மக்களுக்காக அவர்களை கல்விக்கூடங்கள் கட்ட வைத்த பெருந்தலைவர் காமராஜர் போன்ற வித்தியாசான ஊழல்வாதிகள் நாட்டுக்கு தேவையே
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |